முல்லைத்தீவில் 17வயது மாணவி தற்கொலை!

முல்லைத்தீவு முள்ளியவளை பகுதியில் 17வயது மாணவி ஒருவர் விபரீத முடிவு எடுத்து தற்கொலை செய்துள்ளார்.

இவ்வாறு தற்கொலை செய்த மாணவி முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியில் உயர்தர கணிதபிரிவில் கற்றுவருபவர் என தெரியவந்துள்ளது.

கடந்த 26ம் திகதி இவர் தூக்கு மாட்டி தற்கொலை செய்ய முயற்சித்த போது காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று சனிக்கிழமை காலை உயிரிழந்ததாக வைத்தியசாலை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்கொலைக்கான காரணம் இதுவரையில் வெளிவராத நிலையில் இது குறித்த விசாரணைகளை முள்ளியவளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Exit mobile version