இலங்கை

40வயது காதலியை கொலை செய்த 24வயது இலங்கை இளைஞன்!

குவைத்தில் 40வயதுடைய காதலியின் கழுத்தினை நெரித்து கொலை செய்த 24வயது இலங்கையர் பொலிசரிடம் சரணடைந்துள்ளார்.

இதில் கொலை செய்யப்பட்ட பெண்ணும் இலங்கையை சேர்ந்தவர் என கூறப்படுகிறது .

24 வயதான இளைஞனுக்கும், 40 வயதுடைய காதலிக்கும் இடையே தனிப்பட்ட தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் Fahaheel பகுதியில் உள்ள தனது அடுக்குமாடி வீட்டில் வைத்து அப்பெண்ணை கழுத்தை நெரித்து இளைஞன் கொலை செய்திருக்கிறார் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த இளைஞர் காதலியை கொன்ற பின்னர் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை தற்கொலைக்கு முயன்றதாகவும் எனினும் அவரது முயற்சிகள் தோல்வியடைந்ததாகவும் தெரிவித்திருக்கிறார்.

உயிரிழந்த பெண்ணின் உடல் தடயவியல் துறைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், இளைஞன் மீது திட்டமிட்ட கொலை குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button