நுவரெலியாவிற்கு வரவேண்டாம்!

நுவரெலியாவில் நிலவுகின்ற சீரற்ற காலநிலையால் அடை மழை பெய்து வருகின்றமையால் கடும் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது.

அத்தோடு மண்சரிவு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில், நுவரெலியாவிற்கு வருகை தரும் பொதுமக்கள் மிக அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

முடிந்தால் இந்த நாட்களில் நுவரெலியாவிற்கு வருவதை தவிர்க்குமாறும் அதிகாரிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Exit mobile version