இலங்கைமுல்லைத்தீவு

முள்ளிவாய்க்காலில் புதையல்! பாதுகாப்பு வழங்கும் இராணுவம்!

தமிழீழ விடுதலை புலிகளுக்கும் இலங்கை இராணுவத்திற்கும் இடையே நடைபெற்ற கடும்யுத்தம் 2009ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் பகுதியிலே முடிவிற்கு வந்திருந்தது.

இந்நிலையில் முள்ளிவாய்க்கால் –  குறுந்தடி பிள்ளையார் ஆலய வளாகத்திற்குள் புலிகளால் புதைக்கப்பட்ட புதையல் இருப்பதாக கிடைத்த இரகசிய தகவலை அடுத்து அந்த பகுதியில் இராணுவத்தினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தபட்டுள்ளனர்.

குறித்த பகுதியில் 2009ம் ஆண்டு தமிழீழ விடுதலை புலிகள் ஆயுதங்கள் மறைத்து வைத்திருக்கலாம் எனும் சந்தேகத்தில் இராணுவத்தினர் பாதுகாப்பிற்கு ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் குறுந்தடி பிள்ளையார் ஆலய நிர்வாக தலைவர் முள்ளிவாய்க்கால் கிழக்கு கிராம சேவகருக்கு தகவல் வழங்கிய  நிலையில், கடிதம் ஒன்றினையும் அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button