இலங்கை

மனிதர்களை உண்ணும் மீன்கள் கொழும்பில்! அதிர்ச்சி தகவல் வெளியானது!

கொழும்பில் உள்ள சில குளங்களில் மனிதர்களை உண்ணும் மீன் இனம் காணப்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

வனஜீவராசிகள் திணைக்கள சிரேஷ்ட ஆய்வாளர் அஜித் குமார இத்தகவலை தெரிவித்துள்ளார்.

மனிதர்களை உட்கொள்ளும் “பிரன்ஹா” எனும் மிகவும் ஆபத்தான மீன் வகைகள் காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரன்ஹா எனும் இவ்வகை மீன்கள் இலங்கையின் நாடளுமன்றம்  அமைந்துள்ள தியவன்னா ஓயா, களனி கங்கை மற்றும் பொல்கொட குளம் ஆகியவற்றில் அடையாளம் கணப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த பகுதிகளில் மீன் வளர்ப்பிற்கு என விடப்பட்ட மீன் குஞ்சிகளின் போது இந்த வகை மீன் கலந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

அத்தோடு விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட மீன்கள் ஊடாக இந்த அபாய மீன்களும் இலங்கைக்குள் வந்திருக்கலாம் அல்லது வெள்ளம் போன்ற இயற்கை அனர்த்தங்களின் போது குறித்த மீன்கள் வந்திருக்கலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button