இலங்கை

74வயது பாட்டிக்கு வந்த கள்ள காதல், 28வயது மகன் படுகொலை!

74 வயது பாட்டி ஒருவருக்கும் 47 வயதுடைய ஆணுக்கும் ஏற்பட்ட கள்ள காதலினால், பாட்டியின் 28 வயது மகன் குத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் புத்தளத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

மதுரங்குளி கரிக்கட்டை பகுதியை சேர்ந்த 74 வயதுடைய பாட்டி ஒருவருக்கும், திருமணம் செய்யாத 47 வயதுடைய ஆண் ஒருவருக்கும் நீண்ட காலமாக கள்ள காதல் உறவிருந்தது.

நேற்று திங்கட்கிழமை 74 வயது கள்ள காதலியின் வீட்டிற்கு, 47 வயது கள்ள காதலன் சென்றுள்ளார்.

கள்ள காதலனை வீட்டு அறைக்குள் அழைத்து சென்ற காதலி, தான் சமைத்த உணவை ஆசை ஆசையாக ஊட்டி விட்டுள்ளார். கள்ளக்காதலியே ஊட்டிவிடும் கிறக்கத்தில் காதலனும் சொக்கி போய், சாப்பிட்டு கொண்டிருந்துள்ளார்.

கள்ள காதலில் ஈடுபட்ட 74 வயது தாயின் 28 வயது மகன், கேகாலை – அலவ பிரதேசத்தில் திருமணம் முடித்துள்ளார். இந்நிலையில் தாயார் சுகயீனமடைந்ததை அடுத்து, அவரை பார்ப்பதற்காக தனது தாயினது வீட்டுக்கு வந்துள்ளார்.

இதன் போது அறைக்குள் காதல் ஜோடி உணவு ஊட்டி, கொஞ்சி விளையாடி கொண்டிருந்த கண்றாவி காட்சியை கண்டு, கொதித்துள்ளார்.

ஜோடியை கடுமையாக பேசி, கள்ள காதலனை வீட்டை விட்டு வெளியேறுமாறு கூறியுள்ளார்.

இதை அடுத்து தாயின் கள்ள காதலனுக்கும், இளம் குடும்பஸ்தரான மகனுக்கும் இடையே கடும் வாய் தர்க்கம் ஏற்பட்டது. அந்த வாய் தர்க்கம் முற்றியதால் ஆத்திரமடைந்த தாயின் கள்ள காதலன் கத்தியை எடுத்து கள்ள காதலியான மூதாட்டியின் மகனை கடுமையாக தாக்கியுள்ளார்.

இதன் பின் உடனடியாக புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் சிகிச்சை பலன் இன்றி, 28வயது மகன் உயிரிழந்துள்ளார்.

கள்ள காதலன் தப்பிச்சென்று தலைமறைவான நிலையில் பொலிசாரால் கைது செய்யப்பட்டு விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button