இலங்கையாழ்ப்பாணம்

13வயது சிறுமி யாழில் துஸ்பிரயோகம்! ஸ்ரூடியோ உரிமையாளரது மனைவியும் கைது!

யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் 13 வயது சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் ஸ்ரூடியோ உரிமையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இவரது மனைவியையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சிறுவர் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களது நடவடிக்கையினால் ஸ்ரூடியோ உரிமையாளரின் மனைவி கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

ஸ்ரூடியோ உரிமையாளரால் தான்னை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக 13வயது சிறுமி வழங்கிய வாக்குமூலத்தை அடுத்து ஸ்ரூடியோ உரிமையாளர் கைது செய்யப்பட்டு 27ம் திகதி வரை விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஒன்றரை வருடங்களாக குறித்த நபர் தன்னை பல தடவைகள் வன்புணர்ந்ததாக சிறுமி வாக்கு மூலம் வழங்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பாதிக்கப்பட்ட சிறுமியிடம் சட்ட வைத்திய அதிகாரியின் பரிசோதனைக்காக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் குறித்து விசாரணைகளை சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் முன்னெடுத்திருந்தனர்.

சந்தேக நபரால் சிறுமியின் ஒளிப்படங்கள் சில சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டு வழக்கு நடவடிக்கைகள் சந்தேக நபருக்கு சாதகமாக மாற்றப்படவுள்ளமை தொடர்பில் கண்டறிந்தனர்.

இதனையடுத்து அந்த ஒளிப்படங்களை வைத்திருந்தவர்கள் தொடர்பில் யாழ்.பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

அதுதொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் சந்தேக நபரின் மனைவியை கைது செய்ததுடன் மற்றொருவரிடம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் அவரையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகளையும் பொலிஸார் முன்னெடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button