இலங்கைவவுனியா

மனைவியை எரித்து கொலை செய்த கணவன்! வவுனியாவில் அதிர்ச்சி சம்பவம்!

வவுனியா – பூவரசன்குளம், கற்பகப்புரம் பகுதியில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்ப தகராற்றை அடுத்து தனது மனைவியை  கொலைசெய்த குற்றச்சாட்டில் கணவன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சம்பவ தினமன்று கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராற்றினால், தாக்குதலுக்கு உள்ளான மனைவி மயங்கி விழுந்துள்ளார்.

இதனை அடுத்து கணவ்ன் தனது மனைவியின் உடல் மீது மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ மூட்டியமை பொலிஸ் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

இதில் கற்பகப்புரத்தை சேர்ந்த 43 வயதுடைய பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

இது குறித்த விசாரணைகளை பூவரசன்குளம் பொலிசார் முன்னெடுத்த நிலையில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவரை, வவுனியா நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button