நாளை முதல் உரம் விநியோகிக்கும் திட்டம் ஆரம்பம்!

இம்முறை பெரும்போகத்திற்கு விவசாயிகளுக்கு தேவையான கரிம உரத்தை விநியோகிக்கும் வேலைத்திட்டத்தை நாளை முதல் ஆரம்பிக்க விவசாய துறை அமைச்சு தீர்மானித்துள்ளது.

அம்பாறை மாவட்டத்தில் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து அநுராதபுரம், பொலன்னறுவ, மொனராகல, திருகோணமலை, மட்டக்களப்பு, குருணாகல், ஹம்பாந்தோட்ட மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டக்களுக்கு முன்னுரிமை வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Exit mobile version