பணத்தை பதுக்கி வைத்த 65 இலங்கையர்கள், விபரம் இதோ!

பெண்டோரா ஆவணங்களின் மூலம் பணத்தினை மறைத்து வைத்த  மேலும் பலரது பெயர் விபரங்கள் வெளியாகவுள்ளதாக எதிர் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

எதிர்கட்சி தலைவரது அலுவலகத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற ஊடக  சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் தெரிவித்ததாவது,

கிடைக்கும் தகவல்களுக்கு அமைய சுமார் 65 இலங்கையர்களது  பெயர்கள் வெளியாகவுள்ளன.

இப்பொழுது வெளியாகிய ஆவணங்களில் எந்த காலத்தில் இந்த பணம் வெளிநாடுகளில் பதுக்கப்பட்டது என்பது தொடர்பாக கூறப்படவில்லை.

முன்னாள் ஜனாதிபதிகளான ரணசிங்க பிரேமதாச மற்றும் சந்திரிக்கா பண்டாரநாயக்க ஆகியோரது ஆட்சி காலத்தில் நிரூபமா ராஜபக்ச மற்றும் அவரது கணவர் திருகுமார் நடேசன் ஆகியோர் வெளிநாடுகளில் பணத்தினை வைப்பு செய்ததாக இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் ஊடகவியாளர்களால் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த ராஜித சேனாரத்ன,

வர்த்தகர் ஒருவர் எங்காவது பணத்தை வைப்புச் செய்தால், அதற்கு எப்படி நாட்டின் ஜனாதிபதி பொறுப்புக் கூற முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version