யாழில் 19 வயது யுவதி துாக்கில் தொங்கி தற்கொலை!!

யாழ்ப்பாணத்தில் 19 வயது யுவதி ஒருவர் தவறான முடிவெடுத்து தூக்கில் தொங்கி தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜெகதீஸ்வரன் டினுசியா எனும் 19 வயதுடைய யுவதியே இவ்வாறு உயிரிழந்தார்.

வட்டுக்கோட்டை, சுழிபுரம் பகுதியில் வசித்து வந்த குறித்த யுவதி இன்று அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

ஆடை தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகின்ற குறித்த யுவதியின்  தற்கொலைக்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை.

இது தொடர்பான விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

Exit mobile version