அவுஸ்திரேலியாவில் தீவிரமடைந்து வரும் கொரோனா வைரஸ் தாக்கம்!

அவுஸ்திரேலியாவில் இரண்டு மாதங்கள் ஊரடங்கு உத்தரவு அமுலில் இருந்த போதும் கொரோனா பரவலானது கட்டுக்குள் இல்லாமல் தொடர்ந்து பரவிய வண்ணமே உள்ளது.

அவுஸ்திரேலியாவில் கடந்த இரண்டு மாதமாக ஊரடங்கு அமுலில் இருந்தும் கொரோனா பரவல் குறைந்தபாடில்லை. கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் மெல்போன் மாகாணத்தில் 900 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

டெல்டா வைரஸ் காரணமாகவே மெல்போர்ன், விக்டோரியா போன்ற பகுதிகளில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்’ என்று செய்தி வெளியாகியுள்ளது.

அது மட்டுமின்றி நாட்டில் கடந்த 24 மணித்தியாலத்தில் 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதாகவும். அதில் 11 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை மட்டும் அவுஸ்திரேலியாவில் கொரோனாவால் சுமார் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டும், 1290 பேர் பலியாகியும் உள்ளனர்.

Exit mobile version