தேசிய ஆட்பதிவு திணைக்களம் திறக்கப்படும் திகதி அறிவிப்பு!

தேசிய ஆட்பதிவு திணைக்களத்தின் தலைமைக் காரியாலயம் மற்றும் கிளைக் காரியாலங்கள் திறக்கப்படும் என்பது பற்றி அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி எதிர்வரும் அக்டோபர் மாதம் 4ஆம் திகதி முதல் தேசிய ஆட்பதிவு திணைக்களத்தின் தலைமைக் காரியாலயம் மற்றும் ஏனைய கிளைக் காரியாலயங்கள் திறக்கப்படவுள்ளன.

எவ்வாறெனினும், ஒருநாள் சேவை தற்போதைக்கு ஆரம்பிக்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய அடையாள அட்டை பெற்றுக் கொள்வதற்காக கிராம சேவகரிடம் உறுதிப்படுத்தப்பட்ட ஆவணங்கள் பிரதேச செயலகங்களில் நிறுவப்பட்டுள்ள ஆட்பதிவு திணைக்கள பிரதேச கிளைகளில் ஒப்படைக்க முடியும் என தேசிய ஆட்பதிவு திணைக்களம் அறிவித்துள்ளது.

Exit mobile version