சுரங்கத்துக்குள் சிக்கிய பணியாளர்கள் மீட்பு!

வடக்கு ஒன்ராறியோவில் சுரங்கத்திற்குள் சிக்கிய 39 சுரங்கப் பணியாளர்களும் மீட்கப்பட்டுள்ளார்கள்.

Sudbury க்கு அருகிலுள்ள அந்த சுரங்கத்தை நிர்வகிக்கும் நிறுவனமான Vale, மீட்புப்பணி நிறைவு பெற்றுவிட்டதாக தெரிவித்துள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை அந்த சுரங்க ஊழியர்கள் தொழில்நுட்பக் கோளாறு ஒன்றின் காரணமாக சுரங்கத்திற்குள் சிக்கிக் கொண்டார்கள்.

பல ஏணிகளை சேர்த்து வைத்து சுரங்கத்திலிருந்து மேலேறிய அவர்கள், மீட்புக் குழுவினரும் உதவியதைத் தொடர்ந்து சுரங்கத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளார்கள்.

திங்கட்கிழமை இரவு மீட்புப் பணி தொடங்கியது. கடைசி ஊழியர் புதன்கிழமை அதிகாலை 4.45 மணியளவில் மீட்கப்பட்டார்.

தற்போது அந்த 3 ஊழியர்களும் மீட்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து அங்கு கூடியிருந்த மக்கள் பெரும் உற்சாகக்குரல் எழுப்பி அவர்களை உற்சாகப்படுத்தியிருக்கிறார்கள்.

Exit mobile version