1ம் திகதி நாட்டை திறப்பது கேள்விக்குறி! குழப்பத்தில் அரசு!

இலங்கையில் தற்போது நடைமுறையில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தினை 1ம் திகதி நீக்குவதா இல்லையா என்பது குறித்து அரசு குழப்பத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.

ஒரு மாதத்திற்கு மேலாக முடக்கப்பட்டுள்ள நாடானது எதிர்வரும் 1ம் திகதி திறக்கப்படுமென அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் நாட்டை எப்போது திறப்பது என்பது குறித்து இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லை என கொரோனா தடுப்பு செயலணி தலைவரும்  இராணுவத் தளபதியுமான சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

எனினும் இது குறித்து எதிர்வரும் சில நாட்களுக்குள் இறுதி தீர்மானம் அறிவிக்கப்படுமெனவும் அவர் கூறியுள்ளார்.

கண்டி தலதா மாளிகையில் நடைபெற்றின் போது கருத்து வெளியிடும் போதே இராணுவ தளபதி இதனை தெரிவித்தார்.

Exit mobile version