விபத்துச் சம்பவத்தில் குழந்தை உயிரிழப்பு!

பல்லம சேருகல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூன்று வயது நிரம்பிய  குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.

சேருகல பகுதியில் குறித்த குழந்தையின் தந்தை உழவு இயந்திரத்தின் மூலம் புற்களை வெட்டிக் கொண்டிருக்கும் போது, அங்கு வந்த குழந்தையை உழவு இயந்திரம் மோதியுள்ளது.

இதனால் படுகாயமடைந்த குறித்த குழந்தை உடனடியாக சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது குறித்த விசாரணைகளை பல்லம பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Exit mobile version