குடிசை வீடு முற்றாக தீயில் எரிந்து சேதம்!

கிரான், சந்திவெளி நாவலடி ஜீவபுரம் வீதியில் வசிக்கும் அழகையா தெய்வநாயகம் (71 வயது) என்பவரது குடிசை வீடு முற்றாக தீயில் எரிந்துள்ளது.

சந்திவெளி நாவலடி ஜீவபுரம் வீதியில் வசிக்கும் அழகையா தெய்வநாயகம் (71 வயது) மற்றும் நாகமணி யோகம்மா (77 வயது) என்பவர்கள் வசித்து வந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை தங்களது வீட்டிற்கு புதிதாக ஓலை கட்டியுள்ளனர்.

இந்த நிலையில் மனைவி சோறு சமைத்த நிலையில் மீன் வேண்டுவதற்கு சென்ற சமயத்தில் குடிசை வீட்டில் தீ பரவுவதை அவதானித்த மனைவி உடமைகளை எடுக்க வீட்டிற்குள் செல்வதை அறிந்த நான் அவரை வெளியில் அழைத்து வர முற்பட்டபோது ஓலையில் உள்ள தீ எனது உடலில் பற்றிக் கொண்டதால் எனக்கு தீ காயம் ஏற்பட்டதாக அழகையா தெய்வநாயகம் (71 வயது) தெரிவித்தார்.

எனது குடிசை முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளதால் எங்களது உடைகள், உடமைகள் மற்றும் சிறுதொகை பணம் என்பன தீயில் முற்றாக அழிந்துள்ளதாகவும் எவரது பராமரிப்பும் இன்றி தனியாக உள்ளதாகவும் அழகையா தெய்வநாயகம் (71 வயது) மேலும் தெரிவித்தார்.

Exit mobile version