தனக்குத் தானே திருமணம் செய்து கொண்ட மாடல் அழகி!

பிரேசில் நாட்டில் ஆண்கள் மீது வெறுப்பு கொண்ட மாடல் அழகி ஒருவர் தனக்குத் தானே திருமணம் செய்து கொண்டார்.

பிரேசில் நாட்டைச் சேர்ந்த மாடல் அழகி தான் கிறிஸ் கலேர, இவருக்கு வயது 44 இவர் ஆண்கள் மீது கொண்ட அதீத வெறுப்பாலும், ஆண்களால் இவருக்கு ஏற்பட்ட துயரங்களும் இவரை ஆண் இனத்தையே வெறுக்க செய்து விட்டது.

இதன் காரணமாக இவர் தனக்குத் தானே திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணம் எப்படி நடைபெற்றது என்றால் திருமண உடையில் தேவாலயத்தில் வைத்து தானே திருமண செய்து கொண்டு அந்தப் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

Exit mobile version