மனைவியின் கள்ள காதலால், கணவன் இரு பிள்ளைகள் தற்கொலை!

மனைவியின் கள்ள காதலை கைவிடும்படி கணவன் பலமுறை சொல்லியும் மனைவி கேட்காததால் கணவன் பிள்ளைகளையும் கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்த சம்பவம் சேலத்தில் பெரும் அதிர்வினை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் சங்ககிரி பகுதியை சேர்ந்தவர் முருகன்(30). இவர் சமையல் மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார்.

மனைவி முருகேஸ்வரி (27), மகன் சீனிவாசன் (9), மகள் கிருஷ்ணபிரியா (5) ஆகியோருடன் வசித்து வந்தார்.

முருகனின் காலில் சுடுநீர் பட்டதால் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே ஓய்வு எடுத்து வந்தார். இதன்போது மனைவி முருகேஸ்வரி சந்தேகப்படும் வகையில் யாருடனோயோ செல்போனில் பேசி வந்தது முருகனுக்கு தெரியவந்தது.

இதை முருகன் பல முறை கண்டித்துள்ளார். ஆனால் மனைவி முருகேஸ்வரி கேட்ட பாடில்லை.

இதனால் விரக்தி அடைந்த முருகன், நேற்று முன் தினம் தனது இரு குழந்தைகளையும் அழைத்து கொண்டு கடைக்கு செல்வதாக கூறிவிட்டு மனைவியின் செல்போனையும் எடுத்துக் கொண்டு சென்றுள்ளார்.

இரு குழந்தைகளும் இறந்த நிலையில் அழுது கொண்டே பேசிய முருகன் ஒரு வீடியோவை பதிவு செய்துள்ளார்.

அதில் “இதற்கு தானே ஆசைப்பட்டீங்க, எங்களை கொல்லனும்னு முடிவு பண்ணிட்டீங்க, கொன்னுட்டீங்க இந்தா பார்த்துக்கோங்க” என்று கூறி தனது உறவினர்களுக்கெல்லாம் வாட்ஸ் ஆப்பில் அனுப்பிவிட்டு செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டார்.

இதனை அடுத்து மனைவி மற்றும் உறவினர்கள் சங்ககிரி காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து போலீஸார் தீவிர விசாரணை நடாத்திய போது, நேற்று மாலை சங்ககிரி ஆர்டிஓ அலுவலகம் எதிரில் உள்ள திருமண மண்டபத்தின் பின்புறமுள்ள மாந்தோப்பில் முருகன் மற்றும் அவரது இரு குழந்தைகளும் தூக்கிலிட்டபடி சடலமாக கிடந்தனர்.

இதை அடுத்து உடல்களை மீட்ட போலீஸார் பிரேத பரிசோதனைக்காக சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர்.

மனைவியின் கள்ளக்காதல் விவகாரத்தினால் தனது இரு குழந்தைகளையும் கொன்று விட்டு கணவன் தானும் தற்கொலை செய்துகொண்ட இச்சம்பவம் சங்ககிரியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version