முதலாம் திகதி நாடு வழமைக்கு திரும்புமா? இராணுவ தளபதி சொல்வது என்ன?

ஒக்டோபர் 1ம் திகதி நாட்டினை மீள திறப்பதற்கான அனைத்து வழிமுறைகளும் நிறைவுக்கு வந்துள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி விடுத்த கோரிக்கைக்கு அமைவாக அந்தந்த துறைகளுக்கான  திட்டங்களை குறித்த நிறுவனங்களால் இதுவரையில் தயாரிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி குறிப்பிட்டுள்ளார்.

ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி அதிகாலை 4 மணிக்கு நாட்டை திறப்பதற்கு தேவையான நடைமுறைகளே இப்பொழுது  முன்னெடுக்கப்பட்டு வருகிவதாகவும் இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.

சுகாதார பரிந்துரைகள் அதற்கமைய திட்டமிடப்பட்டுள்ளது. அத்தோடு நாட்டை திறந்த பின் மக்கள் செயற்பட வேண்டிய முறைமை தொடர்பிலும் அனைத்தும் வழிக்காட்டல்களும் தயாரிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி மேலும் தெரிவித்தார்.

Exit mobile version