காணாமற்போன சிறுவன் 5 நாட்களின் பின் சடலமாக மீட்பு!

பிரிட்டிஷ் கொலம்பியாவின் ஸ்குவாமிஷ் பகுதியில் மாயமான சிறுவன் 5 நாட்களுக்கு பிறகு சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் மொத்த குடும்பத்தையும் உலுக்கியுள்ளது.

செப்டம்பர் 22ம் திகதி சிறுவன் Richie Stelmack(15) மாயமானதாக பொலிசாருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தன்று சுமார் 10 மணியளவில் தூங்க சென்றவர் பின்னர் மாயமானதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், சனிக்கிழமை பகல் தீவிர நடவடிக்கை முன்னெடுத்த பொலிசார் மற்றும் மீட்பு குழுவினர் சுமார் 10.40 மணியளவில் சிறுவனின் சடலத்தை மீட்டதாக அரிவித்துள்ளனர்.

இந்த விவகாரத்தில் சதித்திட்டம் ஏதும் இருப்பதாக முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்படவில்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர். மேலும், சிறுவனின் சடலம் மீட்கப்பட்ட தகவலை குடும்பத்தினருக்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

சடலம் மீட்கப்பட்ட பகுதியில் பொதுமக்கள் செல்ல வேண்டாம் எனவும், அனுமதியளிக்கும் வரையில் பொறுமை காக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர். சிறுவன் மாயமானதும், மரணமடைந்ததும் தொடர்பில் முழு விசாரணைக்கு பின்னரே தெரிய வரும் என ஸ்குவாமிஷ் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version