இலங்கை

குளிக்க சென்றவர் சடலமாக மீட்பு!

மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள சந்திவெளி வாவியில் நேற்று (25) மாலை குளிக்க சென்ற ஆண் ஒருவர் நீரிழ் மூழ்கி உயிரிழந்த நிலையில் இன்று (26) காலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

மொறக்கொட்டாஞ்சேனை தேவபுரத்தைச் சேர்ந்த 60 வயதுடைய கிருஷ்ணபிள்ளை என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் சம்பவ தினமான நேற்று மாலை 5 மணிக்கு வீட்டில் இருந்து சந்திவெளி வாவியில் குளிக்க செல்வதாக தெரிவித்து வெளியேறியவர் வீடு திரும்பாத நிலையில் உறவினர்கள் தேடி வந்த நிலையில் இன்று காலையில் குறித்த வாவியில் நீரிழ் மூழ்கி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவரை பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button