வெளிநாடுகளிலிருந்து இலங்கை வருவோருக்கு இன்று முதல் புதிய வசதி!

வெளிநாடுகளிலிருந்து இலங்கை வருவோருக்கு இன்று முதல் 3 மணித்தியாலங்களில் பி.சி.ஆர் பெறுபேற்றை பெற்றுக் கொள்ள முடியும் என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க (Prasanna Ranatunga) தெரிவித்துள்ளார்.

3 மணித்தியாலங்களில் பி.சி.ஆர் பெறுபேற்றை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் அண்மையில் மத்திய நிலையம் ஒன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இன்று முதல் இதனூடாக பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளது.

Exit mobile version