நாமல் ராஜபக்சவிடம் கண்ணீர் விட்டு அழுத தாய்!

பயங்கரவாத தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள தனது மகனை விடுதலை செய்யுமாறு கோரியும், உடனடியாக இதற்கு தீர்வு ஒன்றை சொல்லி விட்டு போகுமாறும் தாயொருவர் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்சவிடம் (Namal Rajapaksa) கண்ணீர் விட்டு அழுத சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

இதன் போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனது மகனை விடுவிக்குமாறும் குறித்த தாய் கோரிக்கை விடுத்துள்ளார்.

மட்டக்களப்பு – வந்தாறுமுலையில் இடம்பெற்ற நிகழ்விற்கு பிரதம விருந்தினராக கலந்து கொண்டிருந்த போதே குறித்த தாய் தனது மகனுக்கான தீர்வினை இவ்விடத்திலேயே பெற்றுத் தந்து விட்டுப் போகுமாறும் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version