கள்ள காதலிக்கு கம்பி நீட்ட மனைவியை கொலை செய்தவர் கம்பி எண்ணுகிறார்!

தனது மனைவியை கொலை செய்து விட்டு, கொரோனாவால்  உயிரிழந்ததாக கூறி, சடலத்தை எரிப்பதற்கு முற்பட்ட கணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

மனைவியை கொலை செய்துவிட்டு, சொத்துக்களை கைப்பற்றிய பின், கள்ள காதலியினை திருமணம் செய்ய வர்த்தகர் ஒருவர் திட்டமிட்டார்.

அதன்படி மனைவியை கொலை செய்த சம்பவம் பொரலஸ்கமுவ பகுதியில் நடைபெற்றுள்ளது.

இதில் கொலை செய்யப்பட்டவர் 45 வயதான இரு பிள்ளைகளின் தாயார் எனவும் இவர்களுக்கு 13, 6 வயதில் பிள்ளைகள் உள்ளனர் எனவும் தெரியவந்துள்ளது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பெண், வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 15ம் திகதி, பெண்ணின் சகோதரிக்கு அழைப்பேடுத்த கணவன், அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

பின் சடலம் களுபோவில வைத்தியசாலைக்கு பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்ட போது கொரோனா தொற்று மீளவும் உறுதி செய்யப்பட்டது.

இதன் போது கணவனின் நடத்தையில், இறந்தவரின் சகோதரிக்கு சந்தேகம் ஏற்பட்டது. சடலத்தின் கழுத்து பகுதியில் நகக்கீறல்கள் இந்த நிலையில் அதனை, சட்டை கொலரினால் கணவன் மறைத்ததாக  பொலிசாரிடம் சகோதரி தெரிவித்தார்.

சடலம் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது பரிசோதனையில் அவர் கொலை செய்யப்பட்டமை தெரிய வந்தது.

இதனை அடுத்து, கணவனான வர்த்தகரை பொலிசார் கைது செய்து விசாரணை நடத்திய போது தலையணையால் மனைவியின் முகத்தை அழுத்தி, கழுத்தை நெரித்து கொலை செய்ததாக கணவன் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.

மனைவியின் பெயரில் உள்ள சொத்துக்களை கைப்பற்றிய பின் கள்ள காதலியினை திருமணம் செய்ய திட்டமிட்டதாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Exit mobile version