இலங்கைவவுனியா

சங்கிலியை அறுத்துக் கொண்டு தப்பியோடிய இளைஞன் கைது!!

வவுனியாவில் வீதியால் சென்ற பெண் ஒருவர் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை அறுத்துக் கொண்டு மோட்டர் சைக்கிளில் தப்பியோடிய இளைஞன் மடிக்கிப் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளான்.

நேற்று (21) மதியம் இடம்பெற்ற இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, வவுனியா, உக்குளாங்குளம் பகுதியில் கடைக்கு சென்று விட்டு வீதியால் நடந்து சென்ற பெண் ஒருவரை பின் தொடர்ந்து மோட்டர் சைக்கிளில் சென்ற இளைஞன் ஒருவர் அவர் அணிந்திருந்த இரண்டரைப் பவுண் தங்கச் சங்கிலியை இழுத்து அத்றுதுக் கொண்டு பல்சர் ரக மோட்டர் சைக்கிளில் தப்பியோடிய போது, குறித்த பெண் கூக்குரல் இட்டு கத்தியுள்ளார்.

இதனை அவதானித்த அப்பகுதி இளைஞர்கள் குறித்த இஞைனை கார் ஒன்றில் விரட்டிச் சென்றதுடன், வவுனியா குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸாருக்கும் தகவல் வழங்கினர்.

திருட்டில் ஈடுபட்ட நபர் வவுனியா, வேப்பங்குளம் சந்தியில் ஏற முற்பட்ட போது அங்கிருந்த வந்த பொலிஸாரும், விரட்டிச் சென்ற இளைஞர்களும் இணைந்து திருட்டில் ஈடுபட்டவரை மடக்கிப் பிடித்து வவுனியா குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

மோட்டர் சைக்கிளை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ள பொலிஸார், குறித்த நபரிடம் இருந்து அறுத்துச் செல்லப்பட்ட இரண்டரைப் பவுண் சங்கிலியும் மீட்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளின் பின் கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button