இலங்கையாழ்ப்பாணம்

குழந்தை பிரசவித்த 27 வயது தாய் மரணம்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இளம் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குழந்தையை பிரசவிப்பதற்கான அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று உயிரிழந்துள்ளார்.

கிளிநொச்சி தர்மபுரத்தில் வசித்து வந்த 27 வயதான அஜந்தன் துஷ்யந்தினி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குழந்தையினை பிரசவித்த நிலையில் தாயார் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உயிரிழந்த பெண்ணின் சடலம் யாழ் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், பிறந்த குழந்தை சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

குழந்தை பிறந்து ஒரு நாள் என்றும் மறுநாள் மூச்சு திணறல் ஏற்பட்டமையினால் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்ட நிலையில் இன்றய தினம் உயிரிழந்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button