இந்தியா

பிள்ளையார் சிலையை மூழ்கடிக்க முயன்ற 16 பேர் பலி!

விநாயகர் சதுர்த்தியின் போது பிள்ளையார் சிலைகளை நீரில்   மூழ்கடிக்க முயன்ற 16 பேர் உயிரிழந்த சம்பவம் இந்தியாவில் இடம்பெற்றுள்ளது.

இதில் மத்திய பிரதேசத்தில் எட்டு பேரும், ராஜஸ்தானில் இருவரும், மகாராஷ்டிராவில் ஒருவரும், உத்தர பிரதேசத்தில் ஐவரும் என மொத்தம் 16பேர் உயிரிழந்துள்ளனர்.

உத்தரப் பிரதேசம்

உத்தரப் பிரதேசத்தின் பாராபங்கி மாவட்டத்தில், ஒரு பெண் மற்றும் அவரது இரண்டு மகன்கள் உட்பட ஐந்து பேர், கல்யாணி ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர்.

மத்தியப் பிரதேசம்

மத்தியப் பிரதேசத்தின் பிந்த், ராஜ்கர் மற்றும் சாட்னா மாவட்டங்களில் பதிவான தனித்தனி சம்பவங்களில் பிள்ளையார் சிலைகளை மூழ்கடிக்க முயன்றபோது 9- 17 வயதுக்கு உட்பட்ட எட்டு சிறுவர்கள் உயிரிழந்தனர்.

ராஜஸ்தான்

ராஜஸ்தானில் அஜ்மீர் மாவட்டத்தில் பிள்ளையார் சிலைகளை மூழ்கடிக்க முயன்ற இருவர் உயிரிழந்தனர்.

மகாராஷ்டிரா

புனே நகருக்கு அருகில் உள்ள சாலை பகுதியில் உள்ள பிள்ளையார் சிலையை மூழ்கடிக்க முயன்றபோது 18 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்தார் மற்றும் ஒருவர் காணாமல் போயுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button