கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!!

கொழும்பு மாவட்டத்தில் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தேசிய தொற்று நோயியல் பிரிவின் விசேட வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம இதனை தெரிவித்துள்ளார்.

கடந்த வாரத்துடன் ஒப்பிடும் பொழுது இந்த வாரம் கொழும்பு மாவட்டத்தில் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் பயணக்கட்டுப்பாடுகள் அமுலில் இருப்பதால் கோவிட் வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்து வருகின்றது என்றும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version