ஆபாச வீடியோவை இணையத்தில் பதியேற்றியவருக்கு நேர்ந்த கதி!

இணையதளத்தில் ஆபாச வீடியோக்களை வெளியிட்ட நபர் ஒருவரை  பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பொலிஸ் விசேட குற்ற புலனாய்வு திணைக்களத்திற்கு கிடைக்கப்பட்ட தகவலுக்கு அமைவாக பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட  சுற்றிவளைப்பின் போதே குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

இதன் போது கைது செய்யப்பட்டவர் சீதுவ பகுதியை சேர்ந்த 52 வயதான நபர் என தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Exit mobile version