தந்தையின் கண்ணை தோண்டி எடுத்த கொடூர மகன்! வாழைச்சேனையில் அதிர்ச்சி!

தந்தையினது கண் ஒன்றினை மகன் தோண்டி எடுத்து சிதைவடைய செய்த கொடூர சம்பவம் நேற்று சனிக்கிழமை மட்டக்களப்பு வாழைச்சேனையில் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் வாழைச்சேனை தியாவட்டவான் பாடசாலை வீதியில் உள்ள வீடு ஒன்றிலே நடைபெற்றுள்ளது.

இது குறித்து தெரியவருவதாவது,

தந்தைக்கும் மகனுக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் 67 வயதுடைய தன்னுடைய தந்தையை கடுமையாக  தாக்கிய 19 வயது  மகன், தந்தையின் கண்ணை தோண்டி சிதைத்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள மகனிடம் நடாத்தப்பட்ட விசாரணைகளின் போது மகன் போதைவஸ்துக்கு அடிமையானமை தெரியவந்துள்ளது.

கண் சிதைவடைந்து வெளியில் வந்த நிலையில் தந்தை வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கணவனை அடித்து கொலை செய்த மனைவி கைது!!

Exit mobile version