உலகம்

இரு பெண்களை துஸ்பிரயோகம் செய்தமை தொடர்பில் தீவிரமாக தேடப்படும் நபர்!

ரொறன்ரோ நகரப்பகுதியில் இரு பெண்கள் துஸ்பிரயோகத்திற்கு இலக்கான சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணை முன்னெடுத்துள்ளனர்.

ரொறன்ரோ நகர பகுதியில் வியாழக்கிழமை நடந்த இச் சம்பவம் தொடர்பில் 25 வயதான Odianne Trijuillo என்பவரை பொலிஸார் தேடி வருகின்றனர்.

வியாழக்கிழமை மதியத்திற்கு மேல் சுமார் 2.22 மணியளவில் பெண் ஒருவர் உதவி கேட்டு பொலிசாருக்கு அழைத்துள்ளார். சம்பவத்தின் போது 20 வயதான பெண் ஒருவர் ஹோட்டலுக்கு வெளியே ஒரு பெஞ்சில் உட்கார்ந்திருந்த போது அவரை நபர் ஒருவர் அணுகி உள்ளார்.

ஆனால், அதை விரும்பாத குறித்த பெண் அங்கிருந்து நகர்ந்த நிலையில், குறித்த நபர் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. சில நிமிடங்களுக்கு பிறகு, சுமார் 2.30 மணியளவில் 23 வயதான பெண் ஒருவர் பொலிஸாருக்கு உதவி கேட்டு அழைத்துள்ளார்.

இந்த முறை குறித்த பெண் ஒரு பெஞ்சில் உட்கார்ந்திருந்த போது அவருக்கு அருகாமையில் அமர்ந்த அந்த நபர் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

மேலும், அப்பெண் அங்கிருந்து நகர்ந்து செல்ல முயன்ற போது, அந்த நபர் வலுக்கட்டாயமாக அவருடன் மீண்டும் தாக்குதல் நடத்தியதாக தெரிய வந்துள்ளது. இந்த நிலையிலேயே பொலிசார் Odianne Trijuillo தொடர்பில் புகைப்படம் வெளியிட்டு, பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button