இலங்கையாழ்ப்பாணம்

கொடிகாமம் காரைக்காட்டு வீதி விபத்து தொடர்பில் வெளியான அறிக்கை!!

யாழ். கொடிகாமம் காரைக்காட்டு வீதியில் இடம்பெற்ற விபத்தில், இதயம் வெடித்தே இளைஞன் உயிரிழந்துள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் நேற்று (17) முடிவாகியுள்ளது.

சாவகச்சேரி நீதிமன்றத்தினால் விடுக்கப்பட்ட பணிப்பிற்கு அமைய யாழ். போதனா வைத்தியசாலை மரண விசாரணை நிபுணர் ஜே.மதராஜ் மேற்கொண்ட பரிசோதனையில் அடிப்படையில் குறித்த விடயம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

விபத்தினால் ஏற்பட்ட தாக்கத்தினாலேயே இதயம் வெடித்து இளைஞன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து அவருடைய இறுதி கிரியை நிகழ்வுகள் குறித்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

முன்னதாக தமது மகனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பெற்றோரால் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button