6 வயது சிறுமி துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொலை!

(India TamilSK) தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத்தில் ஆறு வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இதனுடன் தொடர்புபட்ட சந்தேகநபர் ரயில் தண்டவாளத்தில் உயிரிழந்து கிடந்தான்.

ஹைதராபாத்தில் உள்ள சைதாபாத் பகுதியில், கடந்த 9ம் திகதி வயது சிறுமி ஒருவர் காணாமல் போன சிறுமியின் சடலமானது பக்கத்து வீட்டில் வசித்த பல்லகொண்டா ராஜு என்பனின் வீட்டில் கண்டு பிடிக்கப்பட்டது.

இந்த சம்பவத்தை அடுத்து தலைமறைவான ராஜீவை பிடிப்பதற்கு பல போலீஸ் படைகள் அமைக்கப்பட்டன.

அத்தோடு அவன் தொடர்பான தகவல் தருபவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என போலீஸ் அறிவித்தது.

ராஜு என்கவுன்டர் செய்யப்படுவான் என அமைச்சர் மல்லா ரெட்டி கூறியிருந்த நிலையில் தண்டவளாத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளான்.

Exit mobile version