இலங்கைதிருகோணமலை

எட்டு வயது சிறுமியை பலாத்காரம் செய்ய முற்பட்டவருக்கு நேர்ந்த கதி!

திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் எட்டு வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்த சந்தேக நபரை செப்டெம்பர் மாதம் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்ற நீதியாளர் விசானி தேனவது நேற்றைய தினம் (15) உத்தரவிட்டார்.

பேராறு, கந்தளாய் பகுதியைச் சேர்ந்த 65 வயது உடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் சிறுமியின் வீட்டில் மலசல குழி வேலைகளில் ஈடுபட்டு வந்த நிலையில் சிறுமியின் தாயார்
வெளியில் சென்ற வேளை சிறுமியின் ஆடைகளை கழற்றி துஷ்பிரயோகத்திற்கு முயற்சி் செய்ததாக கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் சிறுமின் தாயாரினால் கொடுக்கப்பட்ட முறைப்பாட்டுக்கமைய குறித்த நபர் கைது செய்யப்பட்டிருந்தார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபரை கந்தளாய் நீதிமன்றில் நீதவான் முன்னிலையில் பொலிஸார் ஆஜர்படுத்திய போது விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button