இலங்கைதிருகோணமலை

ஆசையால் வந்த வினை, சம்பவம் செய்ய இறங்கிய பிக்கு கைது!

திருகோணமலை பபுருகஸ்ஹின்ன காட்டு பகுதியில் புதையல் தோண்டிய பௌத்த பிக்கு ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இதில் கைது செய்யப்பட்ட பிக்கு மொரவெவ – நாமல்வத்த கல்கந்த சயில பப்பதாராம விகாரையின் முன்னால் விகாராதிபதி (வயது 49) என தெரிய வந்துள்ளது.

கைது செய்யப்பட்ட பௌத்த பிக்குவை மாவட்ட நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.

அத்தோடு இது குறித்த விசாரணைகளை கோமரங்கடவல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட பிக்கு நாமல்வத்த – கல்கந்த விகாரையில் விகாராதிபதியாக இருந்த போது புதையல் தேடி வருவதனை அவதானிக்கப்பட்டதை அடுத்து அவர் விகாரையில் இருந்து விலக்கப்பட்டமை தெரியவந்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button