தமிழ் அரசியல் கைதிகளை அச்சுறுத்திய அமைச்சர்!

மதுபோதையில் கை துப்பாக்கியோடு அநுராதபுரம் சிறைச்சாலைக்கு  சென்ற சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த, அங்குவைத்து தமிழ் அரசியல் கைதிகளை முழந்தாளிட வைத்து துப்பாக்கி முனையில் அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.

இந்த சம்பவமானது கடந்த 12ம் திகதி நடைபெற்றுள்ளது.

இச் சம்பவத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்  எம்.ஏ.சுமந்திரன் மிகவும் வன்மையாகக் கண்டித்துள்ளார். அராஜகமான இச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை நடத்தி விசாரணையின் பின் அவரை கைது செய்யயுமாறும் சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

விசாரணை முடியும்வரை ராஜாங்க அமைச்சரை பதவியில் இருந்து நீக்குமாறும் அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இச் சம்பவம் மிகவும் அராஜகமானது. ஆகவே, இந்த சம்பவத்துக்குப் பொறுப்பேற்று இராஜாங்க அமைச்சர் உடனடியாகப் பதவி துறக்க வேண்டும் என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அநுராதபுரம் சிறைச்சாலை சிசிடிவிகள் செயலிழக்கும் நிலையில்?

தமிழ் கைதிகளை மிரட்டிய அமைச்சரை பதவி நீக்குங்கள் எதிர்க்கட்சித் தலைவர்!

Exit mobile version