இலங்கையாழ்ப்பாணம்

யாழில் சட்டவிரோதமாக மாடு வெட்டியவர் கைது!

யாழ். இளவாலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பெரியவிளான் பகுதியில் சட்ட விரோதமாக இறைச்சிக்காக மாடு வெட்டியவரை இளவாலை பொலிஸார் நேற்றிரவு கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து 12 கிலோ எடையுடைய மாட்டு இறைச்சியும் கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலும் குறித்த சந்தேக நபர் மீது பொலிஸார் வழக்கு தாக்கல் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button