இலங்கையாழ்ப்பாணம்

குழந்தையை வைத்து பிச்சை எடுத்த பெண்! யாழ் பொலிசாரின் அதிரடி நடவடிக்கை!

யாழ்ப்பாண நகர பகுதியில் குழந்தையோடு யாசகம் பெற்றத பெண் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு எச்சரிக்கை செய்யப்பட்டு சொந்த இடத்திற்கு மீள அனுப்பி வைக்கபட்டுள்ளார்.

குழந்தையோடு யாசகம் பெறும் இவர் சில சந்தர்ப்பங்களில் ஆண் ஒருவரோடுமாக சேர்ந்து மூன்று பேராக யாசகம் பெற்று வந்துள்ளனர்.

வீதியால் போகின்றவர்களிடம் தாம் வெளி மாவட்டத்தில் இருந்து வந்ததாகவும், தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கினால் வீடு செல்ல முடியவில்லை என கூறிவந்த நிலையில் யாழ்ப்பாண பிரதேச செயலரது கவனத்திற்கு இவ்விடையம் கொண்டு வரப்பட்டது.

இதனை அடுத்து யாழ் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலின்படி தட்டாதெரு சந்தியினை அண்மித்த பகுதியில் குழந்தையோடு நின்ற பெண்ணை பொலிஸார் கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தினர்.

இதன்போது நடாத்தப்பட்ட விசாரணையின் போது புதுக்குடியிருப்பு பகுதியினை சேர்ந்தவர் என தெரியவந்தது.

அத்தோடு இவர்கள் குடும்பமாக வந்து மணியந்தோட்டம் பகுதியில் தங்கியுள்ளதோடு முச்சக்கர வண்டி மூலம் யாழ்ப்பாண நகர் பகுதிக்கு வந்து யாசகம் பெறுவதும் தெரியவந்தது.

மீளவும் யாசகம் பெறுவது கண்டுபிடிக்கப்பட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். என எச்சரித்த பொலிஸார் சொந்த ஊருக்கு செல்லுமாறும் அறிவுறுத்தினர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button