துப்பாக்கிகளை திருடிய நபர் ஒருவர் கைது!

உரிமம் பெற்ற இரு துப்பாக்கிகளை திருடிய நபர் ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் ஒன்று புத்தளம் பாலவி குவன்கம பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

புத்தளம் பொலிஸ் தலைமையகத்துக்கு கிடைத்த முறைப்பாட்டினை அடுத்து, பொலிஸ் குற்ற பிரிவு நடாத்திய விசாரணையின் போதே
தனியார் தோட்ட காவலாளி ஒருவர் கைது செய்யப்பட்டார்.

இதன்போது, நடாத்தப்பட்ட விசாரணையின் பின், குறித்த தோட்டத்திற்கு அருகே மறைத்து வைக்கப்பட்ட 12 துளை துப்பாக்கி, ஒரு ஏர் ரைபிள் துப்பாக்கி மற்றும் அதற்கு பயன்படுத்தபடும் தோட்டாக்கள் என்பவை  பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.

குறித்த துப்பாக்கிகள் குற்றம் செய்யும் நோக்கில் அல்லது திருடி விற்கும் நோக்கில் திருடப்பட்டு இருக்கலாம் என பொலிஸார் தெரிவித்தனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குலுக்கு நீதி கோரி இத்தாலியில் ஆர்ப்பாட்டம்!

Exit mobile version