உயிர்த்த ஞாயிறு தாக்குலுக்கு நீதி கோரி இத்தாலியில் ஆர்ப்பாட்டம்!

உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதலுக்கு நீதிகோரி இத்தாலிக்குச் சென்றுள்ள இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்சவிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கருப்புக் கொடிகளை ஏந்தியவாறு அங்குள்ள இலங்கையர்கள் ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்தனர்.

இதன்போது பிரான்ஸ் மற்றும் ஜேர்மனியை சேர்ந்த மக்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கு பற்றியதாக தெரிவிக்கப்படுகிறது.

பாதிக்கப்பட்டோருக்கு நீதி வேண்டும் இங்கு அனைவரும் இன மத பேதம் பாராமல் கூடியுள்ளோம். நியாயம் நிலைநாட்டப்பட வேண்டும் எனவும், நாம் கேட்கின்ற நீதி இன்னமும் கிடைக்கவில்லை எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்

Exit mobile version