இலங்கை

கோவிட் தடுப்பூசியால் கருவுறுதல் பிரச்சினையா? அமைச்சர் வெளியிட்ட கருத்து!

கொரோனா தடுப்பூசியியை நாட்டிலே ஏற்றும் இளைஞர் யுவதிகளின் எண்ணிக்கை குறைந்து வருகின்றது என ராஜாங்க அமைச்சர் சன்ன ஜெயசுமன தெரிவித்துள்ளார்.

இளைய சமுதாயத்திடையே கொரோனா தடுப்பூசியை செலுத்தி கொள்வதனால் கருவுறுதல் பிரச்சனை ஏற்படும் என்கின்ற சந்தேகம் பரவலாக காணப்படுகின்றது.

எனினும் இது தொடர்பில் உலக நாடுகள் நடத்திய எவ்விதமான ஆய்வுகளிலும் இது உறுதி செய்யப்படவில்லை.

ஆகவே இலங்கை இளைஞர் யுவதிகள் அச்சமில்லாமல் கொரோன தடுப்பூசியை பெற்றுக் கொள்ள முன்வரவேண்டும் எனவும் இராஜாங்க அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button