இலங்கைக்கு அருகே உள்ள ஆழ்கடலில் நிலநடுக்கம்!

இலங்கையின் தென் மாகாணத்தில் உள்ள அம்பாந்தோட்டையில் இருந்து சுமார் 160 கிலோ மீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று 13:33 அளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக புவியியல் மற்றும் சுரங்க பணியகத்தின் நில அதிர்வு கண்காணிப்பு நிலையம் தெரிவித்துள்ளது.

எனினும் இந்த நிலநடுக்கத்தினால் இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை எனவும் குறித்த நில அதிர்வு கண்காணிப்பு நிலையம் கூறியுள்ளது.

Exit mobile version