இரட்டைக் குழந்தை பெற்ற தாய் கொரோனாவால் சாவு!

யாழ் போதனா வைத்தியசாலையில் இரு குழந்தைகளை பிரசவித்த இளம் தாயார் மறுநாள் கொரோனாவின் காரணமாக உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் இணுவிலைச் சேர்ந்த அஜந்தன் – இனியா என்னும் 25 வயது நிறைமாத கர்ப்பிணி கடந்த 4ஆம் திகதி மூச்சுத் திணறலால் அவதியுற்றதன் பெயரில் யாழ் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.

அவருக்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர் கொரோனா சிகிச்சை விடுதியில் சேர்க்கப்பட்டார்

அவருக்கு 8ஆம் திகதி காலையில் இரட்டை குழந்தைகள் பிறந்தன. குழந்தைகள் சுகதேகிகளாக உள்ளனர்.

இருந்தபோதும் தாயார் 9ஆம் திகதி கொரோனாவின் காரணமாக உயிரிழந்தார்.

இவரது மரண விசாரணையினை போதனா வைத்தியசாலை திடீர் மரணவிசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டுள்ளார்.

Exit mobile version