வார்த்தைகளால் சொல்ல முடியாத வேதனை! கும்பிட்டு கேட்கும் வைத்தியர்!

இலங்கையில் கொரோனா தொற்றின் பரவல் தொடர்ச்சியாக ஒரேநிலையில் இருப்பதால் சுகாதாரதுறையினர் மிக சோர்வடைந்து உள்ளனர்.

சிலமாதங்களாக தொற்றாளர்ளுக்கு நாள் முழுவதுமாக வைத்தியர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஊடகங்களிற்கு கருத்து வெளியிட்ட வைத்தியர் ஒருவர் தமது நிலைமையை வெளிப்படுத்தி உள்ளார்.

“வைத்தியர்களும், தாதிகளும் உட்பட சுகாதாரதுறையை சேர்ந்த பணியாளர்கள் கடந்த ஐந்து மாதங்களாக வீடுகளிற்கு செல்லவில்லை. பிள்ளைகள் தொலைபேசி ஊடாக அப்பா வீட்டிற்கு வரமாட்டீர்களா என கேட்கிறார்கள். அதன்போது எமக்கு ஏற்படும் வேதனைகளை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. இந்த சூழ்நிலைகளை மக்கள் புரிந்து மிகவும் அவதானமாக செயற்படுங்கள் என கும்பிட்டு கேட்டுகொள்கிறேன்.

கடந்த 6 மாதங்களாக அம்மா அப்பாவை பார்ப்பதற்கு கூட செல்லவில்லை. உண்மையிலேயே இப்பொழுது எமக்கு மிகசோர்வாக உள்ளது”

ஏப்ரல் மாதத்தில் வந்த தமிழ், சிங்கள புத்தாண்டின் போதே கடைசியாக வீடுகளுக்கு சென்றோம். எமக்கும் பிள்ளைகள் இருக்கின்றனர். ஆனால் நாம் எமது வீடுகளுக்கு சென்று அவர்களை பார்க்க முடியாத நிலையிலேயே இருக்கின்றோம் என தெரிவித்துள்ளார்.

Exit mobile version