இலங்கை

ஊஞ்சல் சேலை கழுத்தை இறுக்கியதில் சிறுமி பலி!

ஊஞ்சலில் விளையாடி கொண்டிருந்த 11வயமி ஊஞ்சல் கட்டப்பட்டிருந்த சேலை சிறுமியின் கழுந்தை இறுக்கியதில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் தெரணியகலை- மாலிபொட பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இதில் கெரோனிடா தில்மினி (வயது 11) எனும் சிறுமியே உயிரிழந்துள்ளார்‌.

குறித்த சிறுமி, தன்னுடைய 9 மற்றும்‌ 7 வயதான சகோதரர்களுடன்‌ படுக்கையறையில்‌ சேலையினால் கட்டப்பட்ட ஊஞ்சலில்‌ விளையாடி கொண்டிருந்துள்ளார்.

இதன்போது இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சிறுமியின்‌ தந்தை மாலிபொட தோட்டத்துக்கு வேலைக்குச்‌ சென்றிருந்த நிலையில் தாய்‌ சமையலில்‌ ஈடுபட்டுக்கொண்டு இருந்துள்ளார்‌.

சமையல்‌ வேலைகளை முடித்த தாயார், சிறுவர்கள்‌ விளையாடிய அறைப்‌ பக்கம்‌ சென்ற போது, அறையின்‌ கதவு உள்ளே தாழ்ப்பாள்‌  இடப்பட்டிருந்ததை அவதானித்து, யன்னல்‌ வழியே உள்ளே பார்த்துள்ளார்‌.

இதன்போது, தனது மகள்‌ ஊஞ்சலில்‌ இறுகிய நிலையில்‌ இருந்ததை அவதானித்த அவர் , அயலவர்களின்‌ உதவியுடன்‌ சிறுமியை மீட்டு, தெரணியகல வைத்தியசாலையில்‌ அனுமதித்த நிலையில் , சிறுமி உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

இது குறித்த விசாரணைகளை பொலிஸார்‌ முன்னெடுத்து வருகின்றனர்‌.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button