சேலைன் தயாரிப்பில் வெற்றி கண்டது இலங்கை!

வைத்தியசாலைகளுக்கு தேவையான சேலைன் வகைகளை உள்நாட்டிலே  உற்பத்தி செய்ய என மேற்கொள்ளபட்ட முயற்சிகள் கடந்த காலங்களில் தோல்வியடைந்திருந்தன.

இந்நிலையில் அரச மருந்தக கூட்டுதாபனம் தயாரித்த முதலாவது சேலைன் தொகை, இராஜாங்க அமைச்சர் சன்னஜய சுமனவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச காட்டிய வழிகாட்டலின் படி கண்டி பல்லேகல கைத்தொழில் பேட்டையில், தனியார் நிறுவனம் ஒன்றும், அரச மருந்தக கூட்டுதாபனமும் சேர்ந்து சேலைன் தயாரிப்பினை  ஆரம்பித்திருந்தன.

இந்நிலையில் இலங்கை மருந்தக கூட்டுதாபனத்தின் தலைவர் டாக்டர் உத்பல இந்திரவன்ச குறித்த சேலைன் தொகையினை ராஜாங்க அமைச்சரிடம் நேற்று உத்தியோகபூர்வமாக கையளித்திருந்தா.

Exit mobile version