வீதி விபத்தில் இரு பெண்கள் உட்பட மூவர் பலி!

நேற்று திங்கட்கிழமை நாட்டினது பல பாகங்களிலும் இடம்பெற்ற விபத்துக்களில் இரு பெண்கள் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர்.
வவுனியா – மதவாச்சி வீதியில் உள்ள 171ம் கிலோ மீட்டர் கட்டைக்கு அருகே பேருந்தும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில்
இரட்டைபெரிய குளம் பகுதியை சேர்ந்த 28 வயதுடைய ஒருவர் உயிரிழந்தார்.
விபத்து 2

குருணாகல் ஆயுர்வேத வைத்தியசாலைக்கு அருகே பாதையை கடக்க முற்பட்ட பெண் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் இடம்பெற்ற விபத்தில் 48 வயது பெண் உயிரிழந்துள்ளார்.

விபத்து 3
எந்தேரமுல்ல பகுதியில் பாதையில் நடந்து சென்ற பெண் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் நடைபெற்ற விபத்தில் 71 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

Exit mobile version